சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

தென்மேற்குப் பருவமழை எதிரொலியால், சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து வியாழக்கிழமை அதிகமாக இருந்ததால், சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
சுருளி அருவியில் வியாழக்கிழமை குளித்து, மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.
சுருளி அருவியில் வியாழக்கிழமை குளித்து, மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.

தென்மேற்குப் பருவமழை எதிரொலியால், சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து வியாழக்கிழமை அதிகமாக இருந்ததால், சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால், கடந்த 20 நாள்களாக அருவிக்கு தண்ணீர் வரத்து இல்லை. 
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வன விலங்குகள், மரம், செடி, கொடிகளின் நீர்த் தேவைகளுக்காக, சுருளி அருவிக்கு தண்ணீர் தரும் மணலார் அணையிலிருந்து 10 கன அடி தண்ணீர் மட்டும் திறந்து விடப்பட்டது. இதனால், அருவியில் தண்ணீர் குறைவாக வந்து விழுந்தது. 
இதனிடையே, தென்மேற்குப் பருவமழை திடீரென பெய்ததால், மணலார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் எதிரொலியாக, சுருளி அருவியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 
வியாழக்கிழமை சுருளி அருவிக்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com