தூத்துக்குடியில் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி 78 பேரை போலீசார் கைது செய்யதுள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டபவர்கள் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வன்முறை மேலும் பராமல் இருக்க தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி 78 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.