ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் ஆஜராகியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
இந்நிலையில் விசாரணை ஆணையத்தில் ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் மற்றும் ஜெயலலிதாவின் பள்ளித்தோழி பதர்சயீத் ஆகியோர் இன்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தன. அதன்படி இருவரும் இன்று ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.