சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை பார்வையிட உள்ளார்.
கஜா புயல் கரையைக் கடந்த பகுதியான நாகை மற்றும் திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நாளை வருகை தர உள்ளார். அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட உள்ளார்.
மேலும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் உதவிகளை செய்யுமாறும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.