சென்னை: கஜா புயல் மற்றும் கன மழையால் நேரிட்ட அசம்பாவிதங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
கஜா புயலால் உயிரிழந்தவர்கள் குறித்து தமிழக பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதில், புயல் மற்றும் மழை பாதிப்பில் சிக்கிய மாவட்டங்களில், 26 ஆண்களும், 17 பெண்களும், 3 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
8 மாவட்டங்களில் இதுவரை கிடைத்தத் தகவலின்படி 451 கால்நடைகள் உயிரிழந்துள்ளன என்றும் தமிழக பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.