கஜா புயலால் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் ஜெயகுமார்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் ஜெயகுமார்


நாகப்பட்டினம்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையில் படகில் சென்று புயல் சேதங்களை பார்வையிட்டார். ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு சார்பில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் கடந்த கால பேரிடர்களோடு ஒப்பிடுகையில் கஜா புயலில் பெருமளவு உயிர்ச்சேதங்கள் குறைந்துள்ளது. 

சேதமடைந்த மீனவர் படகுகள் குறித்தான அறிக்கை அளிக்கப்பட்டவுடன் உரிய நிவாரணம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com