சென்னை: கஜா புயல் பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார்.
வியட்நாமில் உள்ள ராம்நாத் கோவிந்த் இன்று தொலைபேசி வாயிலாக முதல்வர் பழனிசாமியைத் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு குறித்தும், எடுக்கப்பட்டு வரும் மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் குறித்தும் ராம்நாத் கோவிந்த் கேட்டறிந்தார்.