வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஓரிரு இடங்களில் இடி, மின்னல் காணப்படும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாகக் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பேச்சிப்பாறையில் 100 மி.மீ.: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு, திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உடுமலைப்பேட்டை, கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம், தருமபுரி, நீலகிரி மாவட்டம் குன்னூர், திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.