அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற திரைப்பட கவர்ச்சி தேவை என்பதை ரஜினி, கமல் உணர்ந்துள்ளனர் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
எதையாவது செய்து அரசியலில் வெல்ல வேண்டும் என்ற சுயநலமில்லாத காரணத்தால் சிவாஜி கணேசன் தேர்தலில் தோற்றார். கொள்கை அடிப்படையிலும் தன்மானத்தின் அடிப்படையிலும் பார்த்தால் சிவாஜி அரசியலில் தோற்றவர் இல்லை
கூடங்குளத்தில் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டும். தென்னிந்திய மாநிலங்கள் கூடங்குளத்தால் பாதிக்கப்படும் அச்சுறுத்தல் உள்ளது. கூடங்குளம் அணு உலை தொடங்கப் பெற்று 4 ஆண்டுகளில் 50 முறை பழுதடைந்துள்ளது, இது உலகில் எங்கும் நடைபெறாத ஒன்று.
அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற திரைப்பட கவர்ச்சி தேவை என்பதை நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உணர்ந்துள்ளனர் என்று தெரிவித்தார்.