விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான தமிழக அரசின் கெடுபிடிகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்திக்கு சிலைகளை வைத்து வழிபடுவது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்து அரசாணை பிறப்பித்தது. தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதனிடையே விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான தமிழக அரசின் கெடுபிடிகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
மத நிகழ்ச்சிகளுக்கு எந்த கட்டுப்பாடும் அரசு விதிக்க முடியாது என்றும் இந்துக்கள் வீதிக்கு வந்து நம் உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய நேரமிது என்றும் அவர் தனது டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.