உடல்நலக் குறைவு காரணமாக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு புதன்கிழமை இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கடந்த 2002 -இல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதையடுத்து 3 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் வழக்கமான பரிசோதனைக்காகவே அவர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என அவர்கள் தெரிவித்தனர்.