நிலவில் சாய்பாபா உருவம் தெரிவதாக கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பரவியதையடுத்து, சென்னை உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு, வானில் நிலவை பொதுமக்கள் ஆர்வத்துடன் உற்று நோக்கினர்.
நிலவில் சாய்பாபா உருவம் தெரிவதாக கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு வேகமாக தகவல் பரவியது. இதையடுத்து ஆன்மிகவாதிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வழக்கத்துக்கு மாறான ஆர்வத்துடன் நிலவை உற்று நோக்கினர். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் நிலவை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.