அமைச்சர் கார் மீது டிராக்டர் மோதியதால் பரபரப்பு

நாகை மாவட்டம், சீர்காழி அருகே அமைச்சர் ஓ.எஸ். மணியனின் கார் மீது டிராக்டர் சனிக்கிழமை மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
அமைச்சர் கார் மீது டிராக்டர் மோதியதால் பரபரப்பு


நாகை மாவட்டம், சீர்காழி அருகே அமைச்சர் ஓ.எஸ். மணியனின் கார் மீது டிராக்டர் சனிக்கிழமை மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே வெள்ளம் சூழ்ந்த கரையோரக் கிராமங்களை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். பின்னர், அவர் முதலைமேட்டு திட்டு கிராமத்திலிருந்து கொள்ளிடம் நோக்கி காரில் சென்றார். அவருடன் மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் தனித்தனி கார்களில் சென்றனர். அமைச்சரின் கார் முன்பு பாதுகாப்பு வாகனம் சென்று கொண்டிருந்தது. 
தண்டேசநல்லூர் நெடுஞ்சாலையில் சென்றபோது, கொள்ளிடத்தில் இருந்து ஆச்சாள்புரம் நோக்கி எதிரே வந்த டிராக்டர் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் விடுத்த சமிக்ஞையையும் மீறி, அவரது கார் மீது மோதியது. இதில், காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. எனினும், கார் ஓட்டுநர் முருகானந்தத்தின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, அமைச்சர் ஓ.எஸ். மணியன் காயமின்றி தப்பினார். டிராக்டர் ஓட்டுநரான ஆச்சாள்புரத்தைச் சேர்ந்த சிவராஜ் கொள்ளிடம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com