மேக்கேதாட்டு விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:
மேக்கேதாட்டு விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடத்துவது அவசியமானது.
திமுக தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிக்ú கூட்டத்திலும் பேரவையைக் கூட்ட வலியுறுத்தினோம். பேரவை கூட்டப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. திமுகவின் கருத்துகளைப் பேரவையில் தெரிவிப்போம்.
புயலால் பாதிக்கப்பட்டு 20 நாள்கள் ஆகியும் காவிரி டெல்டா பகுதியில் எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. இதுபற்றி தமிழக அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஆட்சியை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
தேர்தலைச் சந்திக்கத் தயார்: தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு எந்தச் சூழ்நிலையில் எப்போது தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள திமுக தயாராக இருக்கிறது.