செந்தில்பாலாஜியைத் தொடர்ந்து அமமுக கொள்கை பரப்புச் செயலர் தங்க தமிழ்செல்வன், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகின.
இது பொய்யென்றால் கூட பரவாயில்லை. தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைவதற்கான நாள், இடம் கூட வெளியானது. அதாவது கரூரில் வரும் 27ம் தேதி ஸ்டாலின் முன்னிலையில் தங்க தமிழ்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் இணைவதாகக் கூறப்பட்டது.
இது மட்டும் அல்ல, அவரை திமுகவில் இணையவிடாமல் தடுத்து தங்களது கட்சியில் இணைத்துக் கொள்ள அதிமுகவினர் கடும் பிரயத்தனம் செய்வதாகவும் கூறப்பட்டது.
அட அப்படியா? என்று கேட்டு முடிப்பதற்குள் இதற்கு தங்க தமிழ்செல்வனே பதலளித்து விட்டார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நான் திமுகவில் சேர விருப்பமாக இருப்பதாக @DMKITwing வதந்தியை பரப்பி வருகிறது. இதை யாரும் நம்ப வேண்டாம். நான் என்றும் தியாக தலைவி #சின்னம்மா ஆணைக்கிணங்க மக்கள் செல்வர் @TTVDhinakaran வழியில் என் பயணம் தொடரும். துரோகத்தை வீழ்த்தி எதிரியை வென்று கழகத்தையும் தமிழகத்தையும் மீட்போம் என்பது உறுதி என்று பதிவிட்டுள்ளார்.