தமிழகத்தில் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச் சாவடி முகவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை உரையாற்ற உள்ளார். இதுகுறித்து, தமிழக பாஜக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
வேலூர், காஞ்சிபுரம், தென்சென்னை, விழுப்புரம் ஆகிய நான்கு மக்களவைத் தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு உரையாற்றுகிறார்.
காணொலிக் காட்சி மூலமாக நடைபெறும் இந்தக் கலந்துரையாடலில் பாஜக வாக்குச் சாவடி முகவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக பாஜக அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.