தணிக்கைக் குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும் சட்டத்துக்குப் புறம்பானது. இத்தகைய செயல்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் சுட்டுரையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.