அதிமுக தேர்தல் பிரசாரக் குழு பொறுப்பாளராக வைகைச் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அதிமுக தலைமை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளன. இதையொட்டி பேச்சாளர்கள், கலைக் குழுவினர் உள்ளிட்டோரை முறைப்படுத்தி, ஒருங்கிணைத்து, கட்சியின் சார்பில் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் பொறுப்பாளராக, கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வைகைச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.