தமிழ்நாடு
அக்டோபர் 15க்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
அக்டோபர் 15க்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 15க்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத் தகவலில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த டிட்லி புயல் ஆந்திரா மற்றும் ஒடிசாவுக்கு இடையே இன்று அதிகாலை கரையை கடந்தது. இதன் விளைவாக ஒடிசாவில் புயல் காற்றுடன் கூடிய, கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.