புதுச்சேரி: தீபாவளிப் பண்டிகையையொட்டி, சர்க்கரை, அரிசி மற்றும் துணிக்கு பதிலாக ரொக்கப் பரிசு அளிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, தீபாவளியையொட்டி இலவச அரிசி, சர்க்கரைக்கு பதிலாக சிவப்பு அட்டைதாரர்களுக்கு தீபாவளிப் பரிசாக ரூ.1,275 ரொக்கமும், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ.675 ரொக்கமும் வழங்கப்படும்.
இந்த ரொக்கம், குடும்ப அட்டை தாரர்களின் வங்கிகணக்குகளில் செலுத்தப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச துணிக்கு பதிலாக ரூ.1,000 வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்றும் புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார்.