முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தலைமையில் கருணாநிதியின் நினைவிடம் நோக்கி புதன்கிழமை அமைதிப் பேரணி நடைபெற உள்ளது.
திமுகவில் மீண்டும் தன்னைச் சேர்க்க வேண்டும் என்று மு.க.அழகிரி கோரி வருகிறார். ஆனால், ஸ்டாலின் தரப்பில் இருந்து இதற்கு எந்தவிதப் பதிலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலைய சந்திப்பில் இருந்து, கருணாநிதி நினைவிடம் வரை அழகிரி தலைமையில் புதன்கிழமை காலை 10 மணிக்கு அமைதிப் பேரணி நடைபெற உள்ளது. இந்தப் பேரணியில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து, தனது ஆதரவாளர்களை அழகிரி திரட்டியுள்ளார்.
மேலும், இந்தப் பேரணியின் மூலம் தனது பலத்தை நிரூபிக்கப் போவதாகவும் அழகிரி கூறியுள்ளார்.
அதனால், அரசியல் வட்டாரத்தில் பேரணிக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பேரணி முடிவில் செய்தியாளர்களைச் சந்திக்கப் போவதாகவும் அழகிரி கூறியுள்ளார்.