சென்னை: குட்கா ஊழலில் கைது செய்யப்பட்ட மாதவராவை, சிபிஐ அதிகாரிகள் இன்று செங்குன்றத்தில் உள்ள கிடங்குக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
குட்கா ஊழல் வழக்கில், மாதவரத்தில் உள்ள குட்கா கிடங்கின் உரிமையாளர்கள் மாதவராவ் உட்பட 5 பேரை கைது செய்த சிபிஐ, 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
வெள்ளிக்கிழமையுடன் இவர்களது போலீஸ் காவல் முடிவடையும் நிலையில், மாதவராவை, இன்று செங்குன்றம் அழைத்துச் சென்றுள்ள சிபிஐ அதிகாரிகள், குட்கா பறிமுதல் செய்யப்பட்ட கிடங்கில் முக்கிய ஆதாரங்களைத் திரட்டவும், விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.