அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை (அமமுக) அரசியல் கட்சியாக பதிவு செய்யக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அமமுகவுக்கு சின்னம் பெறுவது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றபோது அமமுகவை கட்சியாகப் பதிவு செய்யத் தயாராக இருப்பதாக டிடிவி தினகரன் தரப்பில் வாதிடப்பட்டது. அதை
யடுத்து அமமுகவை சுயேச்சையாகக் கருதி பொதுச் சின்னம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கட்சியின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் கடந்த வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், டிடிவி தினகரன் சார்பில் அவரது வழக்குரைஞர்கள் ராஜா செந்தூர் பாண்டியன், அமித் ஆனந்த் திவாரி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்துக்கு திங்கள்கிழமை சென்று, அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்வது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தனர். இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட பரிசுப் பெட்டி பொதுச் சின்னத்தை அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.