சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடந்துவரும் 5 -ஆம் கட்ட அகழாய்வில், வியாழக்கிழமை இரும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில், தமிழக அரசு சார்பில் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட குழிகளில் இதுவரை ஏராளமான பழங்காலப் பொருள்கள் கிடைத்துள்ளன.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரும்புத் துண்டுகள், 2,500 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது.