தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான சிபிஎஸ்இ தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட சுட்டுரையில் கூறியிருப்பது:
சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணத்தைத் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உயர்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது. நீட், நெக்ஸ்ட், புதிய கல்விக் கொள்கை வழியில் தேர்வுக் கட்டணத்தையும் உயர்த்தி சமூகநீதியை நீக்கத் துடிக்கும் பாஜக அரசின் போக்கை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இதை உணர்ந்து உடனடியாக தேர்வுக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.