சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 29 ஆயிரம் ரூபாயைக் கடந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக் கொண்டிருப்பதால் ஆவணி மாதம் திருமணம் வைத்திருக்கும் ஏழை, எளிய மக்கள் கடும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
தங்கம் வாங்கப் போகிறோமோ இல்லையோ, நாள்தோறும் இந்த விலை உயர்வு நடுத்தரக் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
இன்று ஒரே நாளில் சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.192 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.29,016க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராமுக்கு ரூ.24 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.3,627க்கு விற்பனையாகிறது.
ஆகஸ்ட 4ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.27,328க்கு விற்பனையான நிலையில், இன்று ஆகஸ்ட் 13ம் தேதி இது ரூ.29 ஆயிரத்தை தாண்டியுள்ளது.