சென்னை: விரைவு ரயில்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்கள், சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு 30 நிமிடம் முன்னதாக வர வேண்டும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு, சென்னை உட்பட நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, பயணிகள் அனைவரும் ரயில் நிலையத்துக்கு அரை மணி நேரம் முன்னதாக வரும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் முருகன் கூறியிருப்பதாவது, சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளும், பயணிகளும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே, பயணிகள் தங்களது ரயில் புறப்பட அரை மணி நேரம் முன்னதாகவே ரயில் நிலையத்துக்கு வந்தால்தான் அனைத்து பரிசோதனைகளையும் முடித்துக் கொண்டு தங்களது ரயிலைப் பிடிக்க வசதியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.