குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சனிக்கிழமை முதல் பரவலாக ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மயிலாப்பூர், கொளத்தூர், வேளச்சேரி, கே.கே.நகர், பெரும்பாக்கம், மெரினா, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அம்பத்தூர், ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை அருகே செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் ஒரே நாளில் 1,000 மில்லியன் கனஅடி உயர்ந்துள்ளது. மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,182 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இதையடுத்து சென்னையில் மழை பாதிப்பு தொடர்பான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மழை பாதிப்பு குறித்து 044-25384520, 044-25384530 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.
044-25384540 மற்றும் 9445477205 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் மழை பாதிப்பு குறித்து தகவல் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.