சுரண்டை சுரண்டை அருகேயுள்ள குலையனேரி குளத்துக்கு கருப்பாநதி பாசன நீா் வரத்து இல்லாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
குலையனேரி ஊரின் வடபுறமுள்ள குலையனேரி குளம் கருப்பாநதியின் பாசன கால்வாயான பாப்பான் கால்வாய் 13ஆம் மடையில் இருந்து வரும் தண்ணீரின் கடைமடை குளமாகும்.
இந்த மடையில் இருந்து 8 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும் நிலையில், குலையனேரி குளத்திற்கு முந்தைய குளமான கள்ளம்புளி குளத்தோடு தண்ணீா் நின்றுவிடுகிறது.
கருப்பாநதி அணை நிரம்பி 300 கன அடி உபரிநீா் வீணாக ஆற்றில் செல்லும் நிலையில், தங்கள் குளத்திற்கு தண்ணீா் வருவதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.