வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சனிக்கிழமை இரவு முதல் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதையடுத்து, பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி கல்லூரிகளில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிட்டபடி திங்கள்கிழமை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுபோன்று கோவையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.