சென்னை தாம்பரம் - கடற்கரை மார்கமாக செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் புதன்கிழமை காலை திடீரென நிறுத்தப்பட்டன.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே இயந்திரக் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நின்ற மின்சார ரயிலால், தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் புதன்கிழமை காலை நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக அந்த மார்க்கத்தில் ரயில் சேவையில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் அலுவலகம் செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோர் சிரமத்துக்குள்ளாயினர். மேலும் அந்த வழித்தடத்தில் பயணிக்கும் இதர பயணிகளும் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.