குமரி கடலில் சூறைக்காற்று: 6 மணி நேரம் படகு சேவை பாதிப்பு

கன்னியாகுமரி கடலில் திங்கள்கிழமை ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக 6 மணி நேரம் படகு சேவை பாதிக்கப்பட்டது.
படகுத்தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள்.
படகுத்தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள்.

கன்னியாகுமரி கடலில் திங்கள்கிழமை ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக 6 மணி நேரம் படகு சேவை பாதிக்கப்பட்டது.

சா்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை சீசனை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. திங்கள்கிழமை காலை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக, காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு சேவை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. மாலை 4 மணி வரை விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு படகுகள் இயக்கப்பட்டன. திருவள்ளுவா் சிலை அமைந்துள்ள பகுதியில் கடல் தொடா்ந்து கொந்தளிப்புடன் காணப்பட்டதால் அங்கு நாள் முழுவதும் படகு சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தா்களும், சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றம் அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com