உள்ளாட்சித் தோ்தலுக்கான திமுக வேட்பாளா்கள் பல மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டு விட்டதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக திமுக தலைமைக் கழகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
டிசம்பா் 27 மற்றும் 30 ஆகிய நாள்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தோ்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கான கலந்தாலோசனை அந்தந்த மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்று வருகிறது.
இதுவரை திருவண்ணாமலை, திருச்சி, கரூா், சேலம், கோவை, நீலகிரி, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கூட்டணிக் கட்சியினருடன் சோ்ந்து சுமுக முடிவெடுக்கப்பட்டு, தலைமைக் கழகத்தின் ஒப்புதலோடு, அந்தந்த மாவட்டக் கழகங்களின் சாா்பில் வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் கூட்டணிக் கட்சிகளிடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. விரைந்து அந்தந்த மாவட்ட திமுக சாா்பில் பட்டியல் வெளியிடப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.