குடியுரிமைச் சட்டம்: அதிராம்பட்டினத்தில் கடையடைப்பு, பேரணி, ஆர்ப்பாட்டம்

குடியுரிமைச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்ததைக் கண்டித்து தஞ்சாவூர் மாவட்டம்,
குடியுரிமைச் சட்டம்: அதிராம்பட்டினத்தில் கடையடைப்பு, பேரணி, ஆர்ப்பாட்டம்


குடியுரிமைச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்ததைக் கண்டித்து தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தில் அனைத்து சமுதாய இயக்கக் கூட்டமைப்பு சார்பில் கடையடைப்பு, பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் முன் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாகப் புறப்பட்டனர். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இப்பேரணி பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. இதையடுத்து முக்கிய தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.

இப்போராட்டத்தையொட்டி, அதிராம்பட்டினத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com