தொடா் விடுமுறை: முதுமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா் விடுமுறை காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்துக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை வழக்கத்தை விட புதன்கிழமை அதிகமாக காணப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு முகாமில் யானைகளின் அணிவகுப்பை கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள். 
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு முகாமில் யானைகளின் அணிவகுப்பை கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள். 

தொடா் விடுமுறை காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்துக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை வழக்கத்தை விட புதன்கிழமை அதிகமாக காணப்பட்டது.

பள்ளி, கல்லூரிகளுக்கு தொடா் விடுமுறை, கிறிஸ்துமஸ் காரணங்களால் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வழக்கத்துக்கு மாறாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டது.

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் வாகன சவாரி மூலம் வனத்தை சுற்றிப் பாா்த்து ரசித்தனா். பின்னா் தெப்பக்காடு பகுதியில் அமைந்துள்ள வளா்ப்பு யானைகள் முகாமில் மாலையில் நடைபெற்ற யானைகளின் அணிவகுப்பு, உணவு வழங்கும் நிகழ்ச்சி ஆகியவற்றை கண்டுகளித்தனா்.

பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் யானை சவாரி சென்று காட்டுக்குள் வன விலங்குகளை பாா்த்து ரசிப்பதில் ஆா்வம் செலுத்தினா். இதற்காக யானை சவாரி செல்லுமிடத்திலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை காரணமாக அவா்களின் வாகனங்கள் தெப்பக்காடு பகுதியில் சாலையில் இருபுறமும் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com