சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில், இந்து மதத்தினர் பெரும்பாலும் பின்பற்றும் முறையிலான திருமணம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அநாகரிக முறையில் கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.
நாத்திகவாதமும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக அமைந்திருந்த அவரது பேச்சு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், இந்து முறைப்படி திருமணம் செய்பவர்கள் திமுக உறுப்பினராக இருக்கக்கூடாது என்றும் அவர்கள் திமுக சார்பில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ, அமைச்சர்களாகவோ ஆக முடியாது என்றும் ஸ்டாலின் அறிவிக்கத் தயாரா என்று சவால் விடுத்திருந்தார்.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்க பதிவில், முகேஸ் அம்பானியின் இல்லத் திருமணத்திற்கு செல்லப்போகும், ஸ்டாலின், அங்கு கடைபிடிக்கப்படும் இந்து கலாச்சாரங்களை பார்த்து என்ன சொல்லப்போகிறார் என விமர்சித்துள்ளார்.
"எந்த கல்யாணம் சென்றாலும் இந்த உரை தான் போலிருக்கு, அடுத்து அட்டன் பண்ணப்போறது அம்பானி வீட்டு கல்யாணம், அங்கேயும் புகை, சமஸ்கிருத மந்திரம், பிராமண புரோகிதர்கள் எல்லாம் இருப்பார்களே” என விமர்சித்துள்ளார் கஸ்தூரி.