வரும் மக்களவைத் தேர்தலை அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியில் இணைந்து பாமக சந்திக்கவிருப்பது என்ற முடிவு இன்று காலை இரு கட்சித் தலைவர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி உட்பட 40 மக்களவைத் தொகுதிகளில் 7 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவைத் தொகுதியும் பாமகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த 7 தொகுதிகள் என்னென்ன என்பது குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில், அதிமுக அரசின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்த பாமக, தற்போது அதன் தலைமையிலான கூட்டணியில் இணைந்திருப்பது அரசியல் கட்சி வட்டாரத்திலும், மக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இது ஒன்றும் சமரசக் கூட்டணி இல்லை என்றும், தான் எடுத்துக் கூறி வந்த குற்றச்சாட்டுகளை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடுதான் பாமக, அதிமுகவுடன் இணைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதாவது, கூட்டணி ஒப்பந்தத்தில் பாமக வைத்திருக்கும் சில கோரிக்கைகள் இது..
எனவே, இந்த கோரிக்கைளை அதிமுக நிறைவேற்றிக் கொடுத்தால், இது நிச்சயம் சமரசக் கூட்டணி இல்லை என்பது உறுதியாகும். ஆனால்?