வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அனைவருக்கும் தமிழக முதல்வர் அறிவித்துள்ள சிறப்பு நிதி பாகுபாடின்றி வழங்கப்படும் என அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தார்.
வலங்கைமான் அருகே உள்ள உத்தமதானபுரத்தில் செய்தியாளர்களிடம் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் செவ்வாய்க்கிழமை கூறியது:
தமிழக அரசு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் மற்றும் ஏழைத் தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தகுதியுள்ள அனைவருக்கும் இந்த நிதி வழங்கப்படும்.
இதில் பயனாளிகளின் பெயர் விடுபட்டிருந்தால், அவர்களிடம் மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி தகுதியுள்ள அனைவரும் இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெறுவர் என்றார் அமைச்சர்.