மறைந்த அதிமுக எம்பி ராஜேந்திரன் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
திண்டிவனம் அருகே இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் தொகுதி அதிமுக எம்பி ராஜேந்திரன் உயிரிழந்தார். அவருக்கு வயது 62. விழுப்புரம் மாவட்டம், ஜக்காம்பட்டி வீட்டில் இருந்து அவர் சென்னை புறப்பட்டு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதையடுத்து ராஜேந்திரன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் உள்ள ராஜேந்திரன் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிடோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் ராஜேந்திரனின் மரணம் அதிமுக தொண்டர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ராஜேந்திரனின் இறுதி சடங்கானது அவரது சொந்த ஊரான அதானாம்பட்டு கிராமத்தில் நடக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.