தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த ஆவணியாபுரத்தைச் சேர்ந்த மும்தாசர் (19) என்ற பொறியியல் கல்லூரி மாணவர் பணத்துக்காக கடத்திக் கொலை செய்யப்பட்டார்.
பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மும்தாசரைக் கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ.5 லட்சம் பணம் கொடுத்தால்தான் விடுவிப்போம் என்றும் அவரைக் கடத்திச் சென்ற கடத்தல் கும்பல், அவரது தாயாருக்கு செல்போனில் நேற்றிரவு மிரட்டல் விடுத்தது.
இது குறித்து உடனடியாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, மும்தாசரை காவலர்கள் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், திருப்புவனம் வீரசோழம் ஆற்றுப் பகுதியில் மும்தாசர் உடல் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், கடத்தல்காரர்களைப் பற்றி விசாரணை நடத்தி வருகிறது.