திருச்சியில் சாலையில் வீசப்பட்டிருந்த பிறந்து ஒருநாளே பெண் குழந்தையை போலீஸார் சனிக்கிழமை மீட்டனர்.
காஜாமலையில் கே.கே.நகர் பகுதி முஸ்லிம் 2 ஆவது தெருவில் வசித்து வருபவர் அப்துல்கபூர் மகன் ஷாஜகான்(47). இவர் தனது வீட்டின் அருகில் காலையில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது சாலையில் கிடந்த ஒரு கட்டைப் பையிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அவர் பையை எடுத்துப் பார்த்தபோது பிறந்து ஒருநாளே ஆன பெண் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இதுகுறித்து ஷாஜகான் கே.கே.நகர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் வந்து குழந்தையை மீட்டு கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள சேவை மையம் ஒன்றில் ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.