மோடி அலை ஓய்ந்துவிட்டது: சு.திருநாவுக்கரசர் 

உள்நாடு, வெளிநாட்டில் மோடியின் அலை ஓய்ந்துவிட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
மோடி அலை ஓய்ந்துவிட்டது: சு.திருநாவுக்கரசர் 

உள்நாடு, வெளிநாட்டில் மோடியின் அலை ஓய்ந்துவிட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
திமுக - காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகள் கூட்டணி உறுதியாக உள்ளது. உரிய நேரத்தில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

மோடி மீண்டும் பிரதமராக 50சதவீதம் பேர் ஆதரவு என்பதை எதை வைத்து கணக்கிடப்பட்டது. உள்நாடு, வெளிநாட்டில் மோடியின் அலை ஓய்ந்துவிட்டது. மாயாவதி-அகிலேஷ் யாதவ் கூட்டணி பாஜகவுக்கு எதிரானது, காங்கிரசுக்கு எதிரானது அல்ல.

கொடநாடு விவகாரத்தை முதல்வர் சட்ட ரீதியாக அணுகாமல் கைது செய்யும் நடவடிக்கை கூடாது.  கூட்டணிக் கதவை மோடி திறந்து வைத்தாலும், செல்வதற்கு யாரும் தயாராக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com