மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்ட மீனவர் நடுக் கடலில் படகு கவிழ்ந்து இறந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே பொன்னகரம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு தேவா (25). இவர் செவ்வாய்க்கிழமை நடுக்கடலில் மீன்பிடித்தபோது படகு கவிழ்ந்து உயிரிழந்தார். இதையடுத்து அவரது சடலத்தை சக மீனவர்கள் மீட்டு மணமேல்குடிக்கு கொண்டுவந்தனர். சம்பவம் குறித்து மணமேல்குடி கடலோரக் காவல் படையினர் விசாரிக்கின்றனர். இறந்தவரின் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.