சென்னை: அரும்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் 7 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது.
கல்லூரி மாணவர்களில் இரு தரப்பினர் பட்டாக் கத்திகளுடன் ஒருவரை ஒருவர் துரத்தி ஓடி வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களை கதிகலங்க வைத்தது.
இந்த மோதலில் 7 பேருக்கு அரிவாள் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் கத்தி மற்றும் அரிவாளுடன் மோதிக் கொண்ட காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.