பெட்ரோல் விற்பனை நிலையங்களில் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவு குறைவாக இருந்தால் அது குறித்து செல்லிடப்பேசி செயலியில் புகார் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தொழிலாளர் நலத் துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்ட அறிவிப்பு:
பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்கு முன்பாக அதன் அளவு மானி பூஜ்ஜியத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறைவாக விநியோகம் செய்யும் பெட்ரோல் அல்லது டீசல் நிறுவனங்கள் குறித்த புகார்களை தெரிவிக்க தொழிலாளர் நலத் துறையால் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
பச-கஙஇபந என்ற செல்லிடப்பேசி செயலியைப் பதிவிறக்கம் செய்து அதன் மூலமாக புகார் தெரிவிக்கலாம். இதன்மூலம் பெறப்படும் புகார்களின் மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நந்தகுமார் தெரிவித்துள்ளார்.