கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே கரிய கவுண்டனூரில் வாழ்ந்து வரும் கனகராஜின் மூன்று வயது சிறுமி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனகராஜ் - காஞ்சனா தம்பதிகளின் மூன்று வயது மகள் அம்ருதா. நேற்று இரவு பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த அம்ருதா மாயமாகியுள்ளார். அவரது பெற்றோரும், அக்கம்பக்கத்தினரும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், கனகராஜின் வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் அம்ருதா கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கிணற்றில் இருந்து அம்ருதாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் குழந்தையைக் கொண்டு சென்ற போது, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சிறுமி கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிணற்றுக்கு அருகே மதுபாட்டில்கள் இருப்பதைப் பார்த்த காவல்துறையினர், போர்வை ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.