பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட ஏராளமான பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி விடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பல் பற்றிய செய்திகளை அரசியலாக்க வேண்டாம் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் கோரிக்கை வைத்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அந்த இளைஞர், பொள்ளாச்சி சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்ததோடு, பாதிக்கப்பட்ட பெண்கள் துணிந்து முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தனது சகோதரிக்கு நடந்த பாலியல் துன்புறுத்தலை மூடி மறைக்க நினைக்காமல், துணிவோடு இந்த இளைஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் பொள்ளாச்சி கொடூர சம்பவமே வெளி உலகத்துக்கு தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.