ஈரோடு தொகுதி மதிமுக வேட்பாளர் அறிவிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
ஈரோடு தொகுதி மதிமுக வேட்பாளர் அறிவிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் 40 தொகுதிகளின் பட்டியலையும் தங்களது அணியின் பெயரையும்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக வெள்ளிக்கிழமை அறிவித்தார். 

மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட 40 தொகுதிகளில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகளும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியையும் திமுக ஒதுக்கியுள்ளது. இந்தக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.  

இந்நிலையில், மதிமுக-வுக்கு ஈரோடு மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் மதிமுக பொருளாளர் அ.கணேசமூர்த்தி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சனிக்கிழமை அறிவித்தார்.

மேலும், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் எம்.செல்வராசு, சுப்பராயன் ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சனிக்கிழமை நேரில் சந்தித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com