பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் சிபிஐ விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் புகழேந்தி தொடர்ந்த இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் அடுத்த வாரம் விசாரிக்கிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பரவுவதை தடுக்க ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் நிறுவனங்களுக்கு கோவை சிபிசிஐடி போலிஸார் கடிதம் அனுப்பியுள்ளனர்.