சொத்துவரி உயர்த்தியது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை நகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து திமுக எம்எல்ஏ எ.வ.வேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சொத்துவரி உயர்த்தியது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.